அல்வாயில் கழுத்தில் சுருக்கிட்ட நிலையில் ஆணின் சடலம் மீட்பு

கழுத்தில் சுருக்கிட்ட நிலையில் ஆண் ஒருவரின்  சடலம் மீட்கப்பட்டுள்ளது. 

சடலமாக மீட்டகப்பட்டவர், அல்வாய் வடக்கு முத்துமாரியம்மன் கோயிலடியைச் சேர்ந்த ராஜசிங்கம் விக்னேஸ்வரன், 32 வயது ஆண் ஒருவரின்   சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, சடலமாக மீட்கப்பட்டவரது குடும்பத்தினர் பிறந்தநாள் நிகழ்வொன்றிற்க்காக வெளியிடத்திற்க்கு  சென்ற நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நிலையில் அங்கு தூக்கிட்டு தற்கொலை செய்திருக்கலாமென பிரதான மக்கள் தெரிவிக்கின்றனர்.

பிரேத பரிசோதனைக்காகவும், மேலதிக விசாரணைக்காகவும் சடலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான விசாரணைகளை  பருத்தித்துறை பொலீஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *