நினைவேந்தலுக்கு தயாராகும் ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்லம்..!

திருகோணமலை, சம்பூர் ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்லத்தில் நாளை மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வை செய்வதற்கான அலங்கார வேலைப் பணிகளும், அதற்கான முன்னாயத்த ஏற்பாடுகளும் இன்று (26) முன்னெடுக்கப்பட்டது.

இதனை சம்பூர் ஆலங்குளம் மாவீரர் நாள் நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழு முன்னெடுத்திருந்தது.

இதன்போது வரவேற்பு கோபுரம் அமைத்தல், கொடிகள் கட்டி தொங்கவிடல், மாவீரர் நாள் நினைவேந்தலில் கலந்து கொள்வோருக்கான மரக்கன்று வழங்குவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டன.

மேலும் சம்பூர் ஆலங்குளத்தில் இடம்பெறவுள்ள நினைவேந்தலில் கலந்துகொள்ளவுள்ளோருக்கான விசேட போக்குவரத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக நினைவேந்தல் ஏற்பாட்டு குழுவினர் குறிப்பிட்டனர்.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *