சீரற்ற காலநிலை, 05 இலட்சத்தை எட்டிய பாதிப்பு – மக்களுக்கு எச்சரிக்கை !

இலங்கையில் தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை 138944 குடும்பங்களை சேர்ந்த 465746 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தால் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

.அந்த வகையில் கனமழை, மின்னல், திடீர் வெள்ளப்பெருக்கு, சுழல்காற்று ,மண்சரிவு ,மற்றும் மரங்கள் சரிவு ,போன்ற அனர்த்தங்களால் நாட்டில் பல பாகங்களிலும் மக்கள் பாதிப்படைந்துள்ளதுடன் உடமைகளும் சேதமடைந்துள்ளன

மத்திய மாகாணம் மாத்தளை  மாவட்டத்தில் 357 குடும்பங்களை சேர்ந்த 1292 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் 87 வீடுகள் பகுதியளவிலும் 9 வீடுகள் முழுமையாகவும் சேதமடைந்துள்ளன  2பேர் காயமடைந்த நிலையில் 12 குடும்பங்களை சேர்ந்த 51 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 

மத்தியமாகாணம் கண்டி மாவட்டத்தில் 202 குடும்பங்களை சேர்ந்த 881 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் 154 வீடுகள் பகுதியளவிலும் 7 வீடுகள் முழுமையாகவும் சேதமடைந்துள்ளன 11 குடும்பங்களை சேர்ந்த  51 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

நுவரெலியா மாவட்டத்தில் 49 குடும்பங்களை சேர்ந்த 217 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 42 வீடுகள் பகுதியளவில் சேதடைந்துள்ளன 5குடும்பங்களை சேர்ந்த 32 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 

வடமேல் மாகாணம் புத்தளம் மாவட்டத்தில் 9034 குடும்பங்களை சேர்ந்த 30598 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 46வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது 3748 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் 2பேர் உயிரிழந்துள்ளதோடு 2பேர் காயமடைந்துள்ளனர்.

குருனாகல் மாவட்டத்தில் 1037 குடும்பங்களை சேர்ந்த 3316 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 676 குடும்பங்களை சேர்ந்த 2001 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 

சப்ரகமுவ மாகாணம் இரத்தினபுரி மாவட்டத்தில் 145 குடும்பங்களை சேர்ந்த 557 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் 130 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன 2பேர் காயமடைந்துள்ளனர். 

கேகாலை மாவட்டத்தில் 101 குடும்பங்களை சேர்ந்த 392பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 97 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

வடமாகாணம் யாழ் மாவட்டத்தில் 19560 குடும்பங்களை சேர்ந்த 64621 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் 161வீடுகள் பகுதியளவிலும் 3 வீடுகள் முழுமையாகவும் சேதமடைந்துள்ளன 2113 குடும்பங்களை சேர்ந்த 7271பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் .

கிளிநொச்சி மாவட்டத்தில் 4367 குடும்பங்களை சேர்ந்த 13836 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் 25வீடுகள் பகுதியளவில் சேதடைந்துள்ளன.

முல்லைத்தீவு மாவட்டத்தில் 2826 குடும்பங்களை சேர்ந்த 8724 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 48 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன 736 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 

மன்னார் மாவட்டத்தில் 19811 குடும்பங்களை சேர்ந்த 2796 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் 6 வீடுகள் பகுதியளவில் சேதடைந்துள்ளன 9097 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் .

வவுனியா மாவட்டத்தில் 1516குடும்பங்களை சேர்ந்த 5224 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

கிழக்கு மாகாணம் திருகோணமலை மாவட்டத்தில் 4199குடும்பத்தை சேர்ந்த 12524 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் 80 வீடு பகுதியளவில் சேதமடைந்துள்ளன 555 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 

மட்டக்களப்பு மாவட்டத்தில் 23561 குடும்பங்களை சேர்ந்த 73532 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் 73 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன 2242 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் 

மேல் மாகாணம் களுத்துறை மாவட்டத்தில் 1221 குடும்பங்களை சேர்ந்த 5277 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் 32 வீடுகள் பகுதியளவிலும் 24 வீடுகள் முழுமையாகவும் சேதமடைந்துள்ளன

கம்பகா மாவட்டத்தில் 5911 குடும்பங்களை சேர்ந்த 23888 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 455 வீடுகள் பகுதியளவிலும் 1 வீடு முழுமையாகவும் சேதடைந்துள்ளன

அம்பாறை மாவட்டத்தில் 46817 குடும்பங்களை சேர்ந்த 162092 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 623 வீடுகள் பகுதியளவிலும் 67 வீடு முழுமையாகவும் சேதடைந்துள்ளன 1008பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்

தென் மாகாணம் காலி மாவட்டத்தில் 12 குடும்பங்களை சேர்ந்த 33 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 12 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

மாத்தறை மாவட்டத்தில் 219 குடும்பங்களை சேர்ந்த 817 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 13 வீடுகள் பகுதியளவிலும் 2 வீடுகள் முழுமையாகவும் சேதமடைந்துள்ளன.

ஊவா மாகாணம் பதுளை மாவட்டதில் 760  குடும்பங்களை சேர்ந்த 2952 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் 351 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 5வர் காயமடைந்துள்ளனர் 268 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்

மொனறாகலை மாவட்டத்தில் 4 குடும்பங்களை சேர்ந்த 10 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 4வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது

வடமத்தியமாகாணம் அநுராதபுரம் மாவட்டத்தில் 2101 குடும்பங்களை சேர்ந்த 6619 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன்19 வீடுகள் பகுதியளவிலும் 2 வீடுகள் முழுமையாகவும் சேதடைந்துள்ளன 

பொலன்னறுவை மாவட்டத்தில் 974 குடும்பங்களை சேர்ந்த 3759 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் 83 வீடுகள் பகுதியளவிலும் 6 வீடுகள் முழுமையாகவும்  சேதமடைந்துள்ளன

கொழும்பு மாவட்டத்தில் 5 குடும்பங்களை சேர்ந்த 19 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 5 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன  19 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் 

மேல் மாகாணம் களுத்துறை மாவட்டத்தில் 30 குடும்பங்களை சேர்ந்த 120 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 22 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *