வெருகல் பிரதேச செயலகப் பிரிவில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வெருகல் -சித்திர வேலாயுதர் சுவாமி தேவஷ்தானத்தினால்.
இன்று (02) வெள்ள நிவாரண உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.
வெருகல் பிரதேச செயலகத்தில் வைத்து சுமார் 200 குடும்பங்களுக்கு 3000 ரூபாய் பெறுமதியான உலர் உணவு பொதிகங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
வெருகல் பிரதேச செயலாளர், வெருகல் ஆலயத்தின் மரபுவழி , நிருவாகத்தினர் கலந்து கொண்டு இவ் நிவாரணப் பொதிகளை வழங்கி வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.




