நெற்செய்கைகளுக்கு வழங்கப்படும் இழப்பீடு போதாது – விவசாயிகள் விசனம்

கடந்த சில நாட்களாக பெய்த மழையினால் நாசமடைந்த தமது நெற்செய்கைகளுக்கு அரசாங்கத்திடம் இருந்து பெறப்படும் நட்டஈடு போதாது என பொலன்னறுவை பிரதேச விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

வெள்ளம் காரணமாக பல மாவட்டங்களில் கிட்டத்தட்ட நான்கு இலட்சம் ஏக்கர் நெற்பயிர்கள் நாசமாகின.

வடக்கு கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் பெரும்பாலான நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளன.

இதேவேளை, நேற்றைய அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, 

பயிர் இழப்பீடு போதுமானதாக இல்லாவிட்டால், அது தொடர்பில் ஆராய அரசாங்கம் தயாராக இருப்பதாக தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *