
தென்மேற்கு வங்கக் கடலில் கடந்த மாதம் நவம்பர் 23 ஆம் திகதி காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உருவெடுத்த ‘ஃபெங்கல்’ புயல் 27 ஆம் திகதி திருகோணமலையில் இருந்து கிழக்கே 110 கி.மீ. தொலைவில் நிலை கொண்டது. இதன் தாக்கத்தால் இலங்கையின் பெய்த கடும் மழையால் பெருவாரியான பகுதிகள் வெள்ளக்காடாக மாறியிருந்தன. அம்பாறை மாவட்டத்தில் இதன் தாக்கம் உச்சம் தொட்டிருந்தது.

