
கடந்த 14 மாதங்களுக்கு மேலாக தண்ணீர், உணவு, மருந்து, மின்சாரம் உள்ளிட்ட உயிர் வாழ்வதற்குத் தேவையான அனைத்தும் பறிக்கப்பட்ட நிலையில் அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி போன்ற நாடுகளால் விநியோகிக்கப்பட்டு வீசப்படும் 85,000 தொன் இற்கும் அதிகமான குண்டுகளாலும் இஸ்ரேலின் அதி நவீன அழிவு தரும் ஆயுதங்களினாலும் இன்றுவரை காசா, பலஸ்தீன் மக்களின் மீதான படுகொலை தாக்குதல்கள் தினம் தினம் அரங்கேறிக்கொண்டிருக்கின்றன.