இலங்கையில் முதல் முறையாக 9 வயதில் பரத நாட்டிய அரங்கேற்றம் செய்து வவுனியாவை சேர்ந்த மாணவியொருவர் சாதனை படைத்துள்ளார்.
வவுனியாவை சேர்ந்த டற்ஷனா கோபிநந்தன் என்ற மாணவியே இவ்வாறு 9 வயதில் அரங்கேற்றம் செய்துள்ளார்.
இவர் வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் தரம் நான்கில் கல்வி பயின்று வருகிறார்.
இவர் வவுனியா சிதம்பரேஸ்வரம் நடனாலயத்தின் பரதநாட்டிய ஆசிரியையான கலைமணி பிரியங்கா நிக்சன் மற்றும் கலாநிதி நாகராசா செந்தூர்ச் செல்வன் ஆகியோரது மாணவி என்பதும் குறிப்பிடத்தக்கது.
குறித்த அரங்கேற்ற நிகழ்வு கடந்த நேற்று வவுனியாவில் உள்ள சிந்தாமணி பிள்ளையார் ஆலய மண்டபத்தில் இடம்பெற்றிருந்தது.





