
உண்மையில் இலங்கையில் 1950 களில் இருந்து தப்லீக் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வரலாறு கூறுகின்றது. இந்த பணிகள் முஸ்லிம் அல்லது இஸ்லாமிய சமூகத்துக்குள் மட்டும் மட்டுப்படுத்தப்பட்டதாக இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. குறிப்பாக ‘மர்கஸ்’ என்ற பெயரால் அறியப்படும் மத்திய நிலையத்தின் ஊடாக வலையமைப்பு உருவாக்கப்பட்டு இப்பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.