வடமாகாண அபிவிருத்தி உதவியாளர் சங்கத்தின் நிர்வாக தெரிவு இன்று யாழ்ப்பாணம் கலைத்தூது மண்டபத்தில் நடைபெற்றது.
இக் கலந்துரையாடலில் வடமாகாணத்தை சேர்ந்த சகல அரச அலுவலகங்கள் திணைக்களங்கள் என்பவற்றின் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
இதன்போது இச்சங்கத்தின் தலைவராக விஐயராசா விஐயரூபன் தெரிவு செய்யப்பட்டதோடு, செயலாளராக அருளப்பு எட்வேட் ஜெப்ரீசனும், பொருளாளராக அமிர்த சுகந்தனும் தெரிவு செய்யப்பட்டதோடு, உப தலைவர் உப செயலாளர் தெரிவு செய்யப்பட்டதோடு 16 உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.