ரஷ்யா அரசினால் இலங்கை விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட உரம்!

  

ரஷ்யா அரசாங்கத்தினால் நாட்டிற்கு நேற்றைய தினம் வழங்கப்பட்ட  55000 மெற்றிக்தொன் உரத்தினை  கிளிநொச்சி விவசாயிகளுக்கு பகிர்ந்தளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் குறித்த உரங்கள் பூநகரி, கிளிநொச்சி, கண்டாவளை கமநல சேவை நிலையங்களுக்கு இன்று கொண்டு வரப்பட்டன.

இந்நிலையில்  உரத்தினை விரைவாக விவசாயிகளுக்கு பகிர்ந்தளிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் பா.தேவரதன் தெரிவித்தார்.

Leave a Reply