வவுனியாவில் ஒன்றுகூடிய தமிழரசு கட்சியின் மத்திய குழுவினர்..!

தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் வவுனியா இரண்டாம் குறுக்கு தெருவில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இன்று காலை 10.30 மணிக்கு ஆரம்பமாகியது.  

தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தலைமையில் இடம்பெற்றுவரும் இக்கூட்டத்தில்,செயலாளர் ப.சத்தியலிங்கம்,  சி.வி.கே.சிவஞானம், பாராளுமன்ற உறுப்பினர்களான,சி.சிறிதரன்,இரா.சாணக்கியன், து.ரவிகரன்,க.கோடீஸ்வரன்,ஞா.சிறிநேசன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.எ,சுமந்திரன், சீ.யோகேஸ்வரன்,சி.சிவமோகன், சாந்தி சிறிஸ்கந்தராஜா,த.கலையரசன்,ஞா.சிறிநேசன்,மற்றும் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.  

நடைபெற்று முடிந்த பாராளுமன்றத் தேர்தலிற்கு பின்னர் முதல் முறையாக தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு இன்று  கூடியுள்ளது. 

இதன்போது பல்வேறு விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *