சபாநாயகர் அசோக சபுமல் ரண்வல தனது பதவியை இராஜினாமா செய்தமை பாராட்டத்தக்கது- நாமல்

சபாநாயகர் அசோக ரன்வல தனது கல்வித் தகுதி குறித்த கேள்விகளால் தனது பதவியை ராஜினாமா செய்தது பாராட்டுக்குரியது என  சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நாமல் ராஜபக்ச தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசாங்கத்தில் உள்ள ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள். வெளிப்படைத் தன்மையைப் பேணுவதற்கான NPP உறுதிமொழியின்படி தங்கள் தகுதிகளை நிரூபிக்க முடியாதவர்கள் உடனடியாக பதவி விலக வேண்டும்.

தூய்மையான பாராளுமன்றத்தை பேணுவது ஜனாதிபதி அனுரகுமாரவின் பார்வையாக இருந்ததால், NPP யைச் சேர்ந்த சில பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்களின் தகுதிகள் குறித்து பொதுமக்களை தவறாக வழிநடத்துவது உண்மையில் கவலையளிக்கிறது எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *