அமைச்சர் பிமல் ரத்நாயக்கவிற்கும் இந்திய உயர்ஸ்தானிகருக்கும் இடையில் விசேட சந்திப்பு

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்கவை பத்தரமுல்ல, மாகனெகும பிரதேசத்தில் அமைந்துள்ள அமைச்சரின் அலுவலகத்தில் சந்தித்தார். 

இதன்போது குறுகிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றதுடன், இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலைமை தொடர்பில் விசேட கவனம் செலுத்தி இந்திய உயர்ஸ்தானிகர் உரையாற்றினார்.

அண்டை நாடான இலங்கையுடன் வலுவான, நீண்டகால உறவைப் பேணுவதற்குத் தேவையான ஆதரவை இந்திய அரசு தொடர்ந்து வழங்கும் என்றும் அவர் நம்பிக்கையுடன் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *