எலிக்காச்சல் தடுப்பு நடவடிக்கை தீவிரம்…!

தற்போது வடமராட்சி வடமராட்சி கிழக்கு பகுதிகளில் பரவிவரும் எலிக்காச்சலை தடுக்கும் நடவடிக்கைகளாக வீடுவீடாக சென்று எலிக்காச்சல் தடுப்பதற்க்காக விழிப்புணர்வு கருத்துக்களை மக்களுக்கு வழங்கியதுடன் தடுப்பு மருந்தாக doxicycline மருந்து வழங்கப்பட்டு வருகிறது.

இந்நடவடிக்கையில் ஆம்பன் பிரதேச வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரி மருத்துவ கலாநிதி சிவசுதன்  தலமையிலான குழுவினரே இவ்வாறு தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அண்மைய நாட்களாக வடமராட்சி பகுதியில் சில மரணங்கள், மற்றும் தொற்றுக்கு உள்ளான பலர் இனங்காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *