ஊடகவியலாளர்களுக்கு காணிகளை மீட்டு வழங்குதல் தொடர்பான செயலமர்வு

கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர்களுக்கு “காணிகளை மீட்டு வழங்குதல்” தொடர்பான இரண்டு நாள் வதிவிடச் செயலமர்வின் முதல்நாள் செயலமர்வு திருகோணமலையிலுள்ள தனியார் விடுதியில் இன்று சனிக்கிழமை (14) .

இதனை அகம் மனிதாபிமான வள நிலையம் ஏற்பாடு செய்திருந்தது.

திருகோணமலை, மட்டக்களப்பு,அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 20 ஊடகவியலாளர்கள் இச்செயலமர்வில் பங்குபற்றியிருந்தனர்.

இதன்போது காணி என்றால் என்ன? காணி தொடர்பான ஆவணங்களின் முக்கியத்துவம்,காணியின் இயல்பு, அரச காணிகளுக்கு வழங்கப்படும் ஆவணங்கள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு தெளிவூட்டல்கள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *