நுவரெலியாவில் 2024ஆம் ஆண்டிற்கான : சிறந்த கடின பந்து வீரர்களுக்கான விருது வழங்கும் விழா

நுவரெலியா கடின பந்து சம் மேளனத்தினால் 2024ஆம் ஆண்டிற்கான சிறந்த கடின பந்து வீரர்களுக்கான விருது வழங்கும் விழா அண்மையில் நடைபெற்றது. 

இந்நிகழ்வில் மஸ்கெலியா சென்.ஜோசப் கல்லூரியின் மாணவன் ரோகித் ஶ்ரீநாத் சிறந்த சுழல் பந்து வீச்சாளருக்கான விருதை பெற்று பெற்றோருக்கும் , பாடசாலைக்கும் , பற்றுவித்த ஆசிரியர்களுக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

இவர் பாடசாலை கடின பந்து அணி, இரண்டு வருடமும் , 15 வயதுக்குட்பட்ட நுவரெலியா மாவட்ட பாடசாலை கடின அணியில் இரண்டு வரைடமும, 17வயதுக்குட்பட்ட நுவரெலியா மாவட்ட பாடசாலை கடின பந்து அணியில் இரண்டு வருடமும்,19 வயதிற்கு உட்டபட்ட கடின பந்து அணி, மத்திய மாண பாடசாலை கடின பந்து அணி , நுவரெலியா பிரிமியர் லீக் தொடரில் கிளேடி ஏடர்ஸ் அணி மற்றும் மஸ்கெலியா யூத் கிரிக்கெட் அணிகளில் தெரிவு செய்யபட்டு தனது பங்களிப்பை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *