யாழில் கசிப்புடன் ஒருவர் கைது!

 

யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சங்கரத்தை பகுதியில் கசிப்புடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

40 வயது மதிக்கத்தக்க நபரே இன்றையதினம்  கைது செய்யப்பட்டுள்ளார்.

சங்கரத்தை சின்னம்மா வித்தியாலயத்துக்கு அருகாமையில் வைத்து குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். 

இதன்போது அவரிடமிருந்து 1.5 லீட்டர் சகிப்பு மீட்கப்பட்டது.

மேலதிக விசாரணைகளின் பின்னர் அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply