மூதூர் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற ஒளி விழா..!

கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு இயேசு கிறிஸ்துவின் பிறப்பினை கொண்டாடும் வகையில் ஒளி விழா நிகழ்வு மூதூர் பிரதேச செயலகத்தில் இன்று (20) இடம்பெற்றது.

மூதூர் பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் பிரதேச செயலாளர் எம்.பீ.எம்.முபாறக் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

இதற்கான அனுசரணையை எஹட் கரிதாஸ் அமைப்பு வழங்கியிருந்தது.

ஒளி விழா நிகழ்வில்  கரோல் கீதங்கள் இசைக்கப்பட்டதோடு கலை நிகழ்வுகளும் இடம்பெற்று பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.   

Leave a Reply