வட்டவளை சிங்கள பாடசாலை பகுதியில் பூனை சிறுத்தை : மக்கள் அச்சத்தில்

வட்டவளை சிங்கள பாடசாலை பகுதியில் பூனை சிறுத்தை ( ஹந்துன் திவ்யா) கண்டு அப்பகுதியில் உள்ள மக்கள் பீதியில்.

இது குறித்து அப் பகுதியில் உள்ள மக்கள் நல்லதண்ணி வனத்துறை அதிகாரி ரத்நாயக்க மற்றும் அவரது குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கு பார்வை இட்டு அப் பகுதியில் உள்ள அனைத்து மக்களையும் பீதி அடைய வேண்டாம் என கூறி 

இங்கு உள்ளது புலி இல்லை சிறிய ரக பூனை சிறுத்தை இதனால் மக்களுக்கு தீங்கு இல்லை எனவும், இருந்த போதிலும் அவற்றை அகற்ற நடவடிக்கை எடுத்து உள்ளது என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் மக்களுக்கு வீடுகளுக்கு சென்று தெளிவூட்டலும்  செய்தனர்.

அவ் இடத்தில் மூன்று பூனை சிறுத்தை (ஹந்துன் திவ்யா) உள்ளன  தாய் மற்றும் இரண்டு குட்டிகள் அவற்றை அங்கு இருந்து அகற்றி வேறு வனப் பகுதியில் கொண்டு செல்ல ஏற்பாடு செய்து வருகின்றனர் என ரத்நாயக்க தெரிவித்தார்.

Leave a Reply