தொழிலில் ஏற்பட்ட நஷ்டம்; யாழில் உரிமையாளர் எடுத்த விபரீத முடிவு..!

யாழ்ப்பாணத்தில் புகைப்பட நிறுவனம் ஒன்று நஷ்டமடைந்தமையால் அதன் உரிமையாளர் நேற்றையதினம்(23) தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.
இதன்போது கோண்டாவில் வடக்கு, கோண்டாவில் பகுதியைச் சேர்ந்த 43 வயதான குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த நபர் நேற்றையதினம் மரணச் சடங்கு ஒன்றிற்கு சென்றுவிட்டு இரவு 10.30 மணிக்கு வீடு வந்துள்ளார்.
வீடு வந்தவர் மேல் மாடிக்கு சென்றுள்ளார். இந்நிலையில் அவரது மனைவி இரவு 11 மணியளவில் உணவு கொண்டு சென்றவேளை அவர் தவறான முடிவெடுத்த  நிலையில் காணப்பட்டார்.
பின்னர் அவரை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *