நுவரெலியாவில் தேசிய பாதுகாப்பு தின நிகழ்வு

சுனாமி அனர்த்தம் இடம்பெற்று 20 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு, தேசிய பாதுகாப்பு தினத்தை நினைவுகூரும் விசேட நிகழ்ச்சியொன்று இன்று (26) நுவரெலியா மாவட்ட செயலக வளாகத்தில் இடம்பெற்றது.

நுவரெலியா மாவட்ட செயலாளர் திரு.நந்தன கலபட தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் தேசிய கொடி ஏற்றி தேசிய கீதம் பாடப்பட்டு ஆரம்பமானது.

இன்று (26) காலை 9.27 மணியளவில் சுனாமி அனர்த்தத்தில் உயிரிழந்த மற்றும் காணாமல் போன அனைவரையும் நினைவுகூரும், வகையில் இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் பௌத்த, இந்து, இஸ்லாமிய சமய நிகழ்வுகளும் இடம்பெற்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *