உடுத்துறையில் சுனாமிப் பொது நினைவாலயத்தில் : 20 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு

ஆழிப்பேரலையின் கோரத் தாண்டவத்தில் பலியான உறவுகளின் 20 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு, வடமராட்சி கிழக்கு, உடுத்துறையில் உள்ள சுனாமிப் பொது நினைவாலயத்தில் இன்று (26) நடைபெற்றது.

இதன் போது உயிரிழந்த உறவுகளின் நினைவாக பொதுச் சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. 

இதன் போது தமது உறவுகளின் கல்லறைகள் முன்பாக கண்ணீர் மல்க அங்கு வந்திருந்த உறவுகள் கதறியழுதனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *