புத்தளத்தில் சுனாமி அனர்த்தத்தில் உயிழந்தவர்களின் : நினைவாக ஆத்ம சாந்திப் பிராத்தனை

சுனாமியினால் உயிர்நீர்த்தவர்களுக்கு புத்தளத்தில் 2 நிமிட மௌன அஞ்சலி மற்றும் ஆத்மா ஷாந்தி வேண்டி பிரார்த்தனை இடம்பெற்றது.

(2004.12.26) ஆம் திகதி ஏற்பட்ட சுனாமி பேரழிவால் உயிரிழந்தவர்களை நினைவுகூறி இன்று (26) காலை புத்தளம் மாவட்ட செயலகத்தில் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்நிகழ்வு புத்தளம் மாவட்ட அரசாங்க அதிபர் எச்.எம்.எஸ்.பி ஹேரத் தலைமையில் இடம்பெற்றதுடன் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் ஏற்பாடு செய்திருந்தது. 

இந்நிகழ்வில் புத்தளம் மாவட்ட சர்வமதத் தலைவர்கள், புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அதிகாரிகள், முப்படையினர் கலந்து கொண்டனர்.

 இதன்போது சுனாமி பேரழிவில் உயிரிழந்தவர்களுக்காக 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் ஆத்மா ஷாந்தி புத்தளம் மாவட்ட சர்வமதத் தலைவர்களினால் பிரார்த்தனையும் நிகழ்த்தப்பட்டது.

இதன்போது சர்வமதத் தலைவர்களுக்கு நினைவுப் பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *