A9 வீதியில் காணப்படும் ஆபத்தான குழிகள்; சீர்செய்யுமாறு பயணிகள் கோரிக்கை..!

யாழ்ப்பாணம் – கண்டி A9 வீதியில் எழுதுமட்டுவாளுக்கும் முகாமாலைக்கும் இடைப்பட்ட பகுதியில் பாரிய பள்ளங்கள் காணப்படுவதால் அவ் வீதியூடாக பயணிக்கும் வாகன சாரதிகள் பெரும் சிரமத்தை எதிர்கொள்வதாக தெரிவித்துள்ளனர்.

அதேவேளை குறித்த பள்ளங்களினால் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் தோன்றியுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனவே, இது தொடர்பில் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து செயற்பட்டு குறித்த பாரிய பள்ளங்களை நிரவி சீர் செய்ய வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *