முன்னாள் அமைச்சர் மனுஷவின் சகோதரருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

  

முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் சகோதரரான திசர ஹிரோஷன நாணயக்கார நேற்று (28) கைது செய்யப்பட்ட நிலையில், அவரை விளக்கமறியலில் வைக்குமாறு கம்பஹா நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

அதன்படி, திசர ஹிரோஷன நாணயக்காரவை எதிர்வரும் 2025 ஜனவரி 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

பின்லாந்து நாட்டில் தொழில்வாய்ப்பை பெற்று தருவதாக வாக்குறுதியளித்து, 40 இலட்சம் ரூபா பணம் கேட்டு அதில் 30 இலட்சம் ரூபாவை பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் சந்தேகநபர்  கைது செய்யப்பட்டிருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *