
ஹிஜ்ரி 1446 ரஜப் மாதத்திற்கான தலைப்பிறை பார்க்கும் மாநாடு நேற்றுமுன்தினம் டிசம்பர் 31 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்றது. இதன்போது நாட்டின் எப்பாகத்திலும் தலைப் பிறை தென்படாததால் இலங்கை வாழ் மக்கள் புனித ஜுமாதுல் ஆகிரஹ் மாதத்தை புதன்கிழமை ஜனவரி 01ஆம் திகதி 30ஆக பூர்த்தி செய்து மஹ்ரிபு தொழுகையுடன் புனித ரஜப் மாதம் ஆரம்பமாகின்றது