தேசிய மக்கள் சக்தியின் எம்.பிகள் ஊர்காவற்துறை பகுதிக்கு விஜயம்..!

கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகரர் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆகியோர் ஊர்காவற்துறை பகுதிக்கு நேற்றையதினம் (03) விஜயமொன்றை மேற்கொண்டனர்.

இதன்போது ஊர்காவற்துறை இறங்கு துறை மற்றும் அங்கு அமைந்துள்ள படகு திருத்தும் நிலையத்தையும் பார்வையிட்டனர்.

அதேவேளை, குறித்த படகு திருத்தும் நிலையமானது கடந்த அரசாங்கத்தினால் 2021ஆம் ஆண்டு திறந்துவைக்கப்பட்ட நிலையில் செயலிழந்து காணப்படுகிறது.

அதில் இதுவரை ஒரு படகு மட்டுமே ஏற்றப்பட்டு காணப்படுவதாகவும்இ அந்த படகு திருத்தும் நிலையத்தை இயங்க வைப்பதற்கு தகுந்த நடவடிக்கைகளை எடுப்பதாவும் அவர்கள் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *