
2024 செப்டம்பர் 15 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் நடத்தப்பட்ட தரம் 5 க்கான புலமைப்பரிசில் பரீட்சை பாரிய சர்ச்சையைத் தோற்றுவித்துள்ளதை நாம் அறிவோம். இந்த சர்ச்சை தொடர்பான வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட உயர்நீதிமன்றம், முடிவடைந்த தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாளின் பகுதி ஒன்றின் மூன்று கேள்விகள் முன்கூட்டியே வெளியாகியமையால் ஏற்பட்ட நெருக்கடியைத் தீர்ப்பதற்கு நிபுணர்கள் குழு முன்வைத்த 3 தீர்வுகளில் பொருத்தமான தீர்வை தேர்ந்தெடுத்து நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்துக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.