சர்வதேச இரத்தினக்கற்கள் மற்றும் ஆபரண கண்காட்சியை பார்வையிட்ட சஜித்..!

கொழும்பில் உள்ள சினமன் கிராண்ட் ஹோட்டலில் நடைபெற்ற, 2025 சர்வதேச இரத்தினக்கற்கள் மற்றும் ஆபரண கண்காட்சியை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று பார்வையிட்டார்.

இக்கண்காட்சியில் உள்ளூர் மாணிக்கக்கல் மற்றும் ஆபரண உற்பத்தியாளர்கள் மற்றும் பல வெளிநாடுகளைச் சேர்ந்த வடிவமைப்பாளர்கள் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இரத்தினக்கல் மற்றும் ஆபரணத் துறையைச் சேர்ந்த தேசிய வடிவமைப்பாளர்களுக்கு வெளிநாட்டு சந்தைகளுக்குள் பிரவேசிப்பதற்கு இதுபோன்ற கண்காட்சிகள் மிகவும் முக்கியமானவை என சஜித் பிரேமதாச இதன் போது தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *