
தோண்டத் தோண்ட மேற்கிழம்பும் ஊற்றுப்போல புதுப் புதுத் தகவல்கள் இணையத்தில் வெளிவருகின்றன. இந்தத் தகவல் வெள்ளத்தை யாரும் தடுக்க முடியாது. இதில் சிலர் சுய கட்டுப்பாட்டை மீறி தகவல் திரட்டுவதில் ஈடுபடுகின்றனர். எவ்வளவுதான் தகவல்களைத் திரட்டினாலும் அவர்களுக்கு அதில் திருப்தி ஏற்படுவதேயில்லை. இதனால், எப்போதும் தகவல்களை தேடிக் கொண்டிருக்கின்றனர். திரட்டிக் கொண்டிருக்கின்றனர். தகவல்கள் தேவையோ தேவையில்லையோ – அவர்கள் எப்போதும் தகவல்களைத் திரட்டிக் கொண்டே இருப்பார்கள். இதனால், அவர்களுடைய ஆக்கத்திறன் பாதிப்படைகிறது.