
இம்மூன்று தலைவர்களும் தத்தம் கால முஸ்லிம் சமூகத்தின் பல்வேறு தரத்துக் கல்வித் தேவைகளை அறிந்திருந்தார்கள் என்பதை அவர்களது சிந்தனையும் செயற்பாடுகளும் புலனாகின்றன. சமய சூழலில் முஸ்லிம்களுக்கு கல்வி வழங்கப்பட வேண்டும் என்ற கோட்பாட்டையே மூவரும் பின்பற்றியிருக்கிறார்கள். இச்சிந்தனையை சித்திலெப்பை உருவாக்கி, தான் ஏற்படுத்திய தனியார் பாடசாலைகளில் அறபு ஆசிரியர்களை தலைமை ஆசிரியர்களாக நியமித்து பாடத்திட்டத்தில் அறபு, இஸ்லாம் பாடங்களை உள்ளடக்கி பாடப்போதனைகளை நடத்தினார்.