ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் அமைச்சரும் களுத்துறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான இந்திரதாச ஹெட்டியாராச்சி இன்று காலை காலமானார்.
இறக்கும் போது அவருக்கு வயது 99 ஆகும்.
நாட்டின் மிகவும் வயதான அரசியல்வாதிகளில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவரின் உடல் நாளை வரை கொழும்பில் உள்ள ஜெயரத்ன மலர்சாலையில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு,
14 ஆம் திகதி ஹேனகம, பொகுன்விட்டவில் உள்ள அஜந்தா இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு,
15 ஆம் திகதி புதன்கிழமை பிற்பகல் பொகுன்விட்டவில் உள்ள கேந்திர மைதானத்தில் இறுதிச்சடங்குகள் நடைபெறவுள்ளன.