திருமலையில் அரிசி விலையை அதிகரித்து விற்பனை செய்த கடைகள் மீது சட்ட நடவடிக்கை

 

திருகோணமலை நகரில் அரிசி விலையை அதிகரித்து விற்பனை செய்த இரு கடைகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது. 

ஒரு கடையில் சிவப்பு அரிசி 280 ரூபாவுக்கும்,

இன்னொரு கடையில் வெள்ளை பச்சை அரிசி 270 ரூபாவுக்கும்,

விற்பனை செய்யப்படுவதை உறுதிப்படுத்திய பின்பு இரு கடைகளுக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டதாக நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் திருகோணமலை மாவட்ட அதிகாரிகள் தெரிவித்தனர். 

ஆகக் குறைந்தது ஒரு லட்சம் ரூபாய் தண்டப்பணம் செலுத்த நேரிடலாம் என நுகர்வோர் பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *