தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர இன்றையதினம்(14) திருகோணமலையில் இந்து சமய வழிபாடுகளில் ஈடுபட்டார்.
வரலாற்று சிறப்புமிக்க திருகோணமலை திருக்கோணேஸ்வரர் ஆலயத்திலும், ஸ்ரீ பத்ரகாளி அம்மன் இந்து ஆலயத்திலும் சமய சடங்குகள் இடம்பெற்றதோடு இவை இரண்டிலும் கிழக்கு மாகாண ஆளுநர் கலந்து சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.