கடற்றொழிலாளர் சங்க பிரதிநிதிகள்- கிழக்கு ஆளுநர் சந்திப்பு..!

கிழக்கு மாகாண மீனவர் சங்கங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் திருகோணமலை, அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர் பிரதிநிதிகளுக்கும், கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகரவிற்கும் இடையே இன்று(15) திருகோணமலை ஆளுநர் அலுவலகத்தில் கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.  

சட்டவிரோத மீன்பிடி உபகரணங்களைப் பயன்படுத்தி  மீன் பிடிப்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று வேண்டிக் கொண்டதுடன் அவர்களின் பிரச்சினைகள் குறித்து எடுத்துக்கூறப்பட்டது. 

இந்த விடயத்தில் கவனம் செலுத்தி தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாக ஆளுநர் இதன் போது  தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *