ஆசிரியர் ஆட்சேர்ப்பு நேர்முக தேர்வு நீதியாக இடம்பெறவேண்டும்; கிழக்கு ஆளுநர் பணிப்புரை..!

கடந்த  03.08.2024 அன்று நடைபெற்ற கிழக்கு மாகாண ஆசிரியர் சேவை ஆட்சேர்ப்பு போட்டி பரீட்சைக்கான நேர்முகப் பரீட்சைகளை 2025 ஜனவரி 16,17 மற்றும் 18ம் திகதிகளில் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதால், மூன்று நேர்முகப்பரீட்சை சபைகளின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று (15) திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. 

கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர். ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் கிழக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் ஜே.எஸ். அருள் ராஜ் ஆகியோரும் இதில் பங்கு பற்றினர்.

நிகழ்வில் கருத்து தெரிவித்த ஆளுநர், எந்தவொரு தரப்பினருக்கும் அநீதி ஏற்படாத வகையில் ஆட்சேர்ப்பு செயல்முறையை நடாத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *