ஐஸ் போதைப்பொருளுடன் சிக்கிய நீதிமன்ற ஊழியர்!

  

ஐஸ் ரக போதைப்பொருளுடன் நீதிமன்ற பணியாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபர் புதுக்கடை நீதிமன்ற எண் 03 இல் கடமையாற்றும் கஹவத்த பகுதியைச் சேர்ந்த “ஆராச்சி” என்ற நபர் என தெரிவிக்கப்படுகிறது.

இவரிடம் 10 கிராம் 800 மில்லிகிராம் ஐஸ் ரக போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்த ஐஸ் போதைப்பொருளை கஹவத்த பகுதியில் விற்பனை செய்தது தெரியவந்துள்ளது.

மேலும், குறித்த சந்தேக நபர் வெல்லம்பிட்டி பகுதியில் உள்ள வீடொன்றில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதுடன்,

சந்தேகநபரை பொலிஸார் இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *