வலதுசாரிக் கட்சிகளை இணைக்க பேச்சுவார்த்தை; சஜித் தரப்பு நடவடிக்கை..!

அனைத்து வலதுசாரிக் கட்சிகளையும் ஒன்றிணைத்து கூட்டணி அமைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடக பேச்சாளரும்  பாராளுமன்ற உறுப்பினருமான எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார்.

“தலைவர் யார் என்பது முக்கியமில்லை, ஆனால் ஐக்கிய மக்கள் சக்தி மிகப்பெரிய எதிர்க்கட்சியாக இருப்பதால், ஐக்கிய மக்கள் சக்திக்கு அதில் பெரும் இடம் இருக்கும். 

ஐக்கிய மக்கள் சக்தி தற்போது 40 இடங்களை பாராளுமன்றத்தில் வைத்திருக்கிறது, இதன் அடிப்படையிலேயே அனைத்து விடயங்களும் நடக்கும்  எனவும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *