
மியன்மார் ரோஹிங்யா புகலிடக் கோரிக்கையாளர்கள் 116 பேர் தொடர்பிலான விவகாரத்தில், நேரில் மன்றில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு விமானப்படை மற்றும் குடிவரவு குடியகல்வு திணைக்கள சட்ட அதிகாரிகளுக்கு திருகோணமலை நீதிவான் நீதிமன்றம் அறிவித்தல் அனுப்பியது. திருகோணமலை நீதிவான் ஜீவரானி கருப்பையா இதற்கான உத்தரவை கடந்த 10 ஆம் திகதி பிறப்பித்தார்.