
புனித ஹஜ் கடமையினை இலங்கை யாத்திரீகர்கள் இந்த வருடம் மேற்கொள்வதற்கான ஒப்பந்தத்தில் இலங்கை அரசாங்கம் கடந்த சனிக்கிழமை கைச்சாத்திட்டுள்ளது.இலங்கை சார்பாக புத்தசாசன, சமய விவகார மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவியும் சவூதி அரேபியா சார்பில் அந்நாட்டின் ஹஜ் மற்றும் உம்ரா விவகாரங்களுக்கான பிரதி அமைச்சர் கலாநிதி அப்துல்பத்தா பின் சுலைமான் மஷாத் ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.