
புத்தளம் காஸிமிய்யா அரபுக் கல்லூரியின் முன்னாள் அதிபரும், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் புத்தளம் மாவட்ட செயற்குழு உறுப்பினரும், முன்னாள் தலைவருமான அஷ்ஷெய்க் அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிம் (அப்துல்லாஹ் ஹஸரத்) அவர்களின் மறைவு இலங்கை முஸ்லிம் சமூகத்திலும் குறிப்பாக புத்தளம் மாவட்ட முஸ்லிம் தலைமைத்துவத்திலும் நிரப்ப முடியாத இடைவெளியைத் தோற்றுவித்துள்ளது. அஷ்ஷெய்க் அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிம் அவர்கள், புத்தளம் நகரில் கல்விக்கு ஒளி கொடுத்த நாடறிந்த மூத்த உலமா மஹ்மூத் ஹஸரத் அவர்களின் புதல்வராவார்.