
கண்டி, தவுலகல பொலிஸ் பிரிவில், மேலதிக வகுப்புக்காக சென்றுகொண்டிருந்த போது கடத்தப்பட்ட பாடசாலை மாணவி ஆபத்தின்றி பொலிஸாரால் மீட்கப்பட்ட நிலையில், கடத்தலின் பிரதான சந்தேக நபரையும் அவரது நண்பர் மற்றும் வேன் சாரதியையும் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கம்பளை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.