சி.ஜ.டியில் முன்னிலையான கோட்டாபய – ஒன்றரை மணி நேரம் வாக்குமூலம்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று முற்பகல் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகினார்.

படவிளக்கம்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை இன்று குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டது. 

கதிர்காமம் பகுதியில் உள்ள ஒரு காணி தொடர்பாக நடத்தப்படும் விசாரணை தொடர்பான சாட்சியங்களை பதிவு செய்வதற்காக முன்னாள் ஜனாதிபதிக்கு குற்றப் புலனாய்வுத் திணைக்களம் அழைப்பு விடுத்திருந்தது

இந்நிலையில் சுமார் ஒன்றரை மணித்தியாலங்கள் அவர் வாக்குமூலம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *