தம்பலகாமம் பிரதேசத்தில் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம்

தம்பலகாமம் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் கிளீன் சிறீலங்கா வேலைத்திட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டது.

தம்பலகாமம் பொலிஸ் நிலையம் மற்றும் தம்பலகாமம் பிரதேச சபை ஆகியன இணைந்து, ஆரோக்கியமான வாழ்வு என்ற தொனிப்பொருளில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

திருகோணமலை கண்டி பிரதான வீதி உட்பட பல இடங்கள் சிரமதானம் மூலம் சுத்தம் செய்யப்பட்டது.

பொலிஸார், பாதுகாப்பு படையினர் மற்றும் பிரதேச சபை உத்தியோகத்தர்கள் இணைந்து இதனை முன்னெடுத்தனர்

இந்நிகழ்வு தம்பலகாமம் பிரதான பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ரன்ஜன பண்டா தலைமையின்கீழ் நடைபெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *