கல்கிஸ்ஸையில் இன்று துப்பாக்கி சூடு ஒருவர் பலி சந்தேக நபர் கைது!

போதைப்பொருள் கடத்தல்காரர் படோவிட்ட அசங்கவின் வழிகாட்டுதலின் பேரில், மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் கொஸ் மல்லியின் நெருங்கிய உறவினரை துப்பாக்கியால் சுட்டு தப்பியதாக தெஹிவளை பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் காயமடைந்த 24 வயது நபர் களுபோவில வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று உயிரிழந்தார். சந்தேக நபர்களில் ஒருவர் இன்று (19) துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *