வவுனியாவில் அகில இலங்கை ரீதியிலான பூப்பந்து போட்டி

அகில இலங்கை ரீதியிலான பூப்பந்து போட்டியானது வவுனியா, ஓமந்தை உள்ளக விளையாட்டரங்கில் இடம்பெற்று வருகின்றது.

வடமாகாண பூப்பந்தாட்ட சங்கத்தின் ஒழுங்கமைப்பில் நேற்று (18) ஆரம்பமாகி எதிர்வரும் (21) ஆம் திகதி வரை குறித்த போட்டிகள் இடம்பெறவுள்ளது.

 மேலும் (21) ஆம் திகதி மதியம் இறுதிப்போட்டி இடம்பெறவுள்ளது. குறித்த போட்டிகள் கனிஷ்ட மற்றும் சிரேஷ்ட பிரிவின் கீழ் இடம்பெறுவதுடன், இப்போட்டியில்  நாடளாவிய ரீதியில் இருந்து 575 ஆண், பெண் போட்டியாளர்கள் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *