சுழற்றியடித்த காற்றால் யாழ்ப்பாணத்தில் 48 குடும்பங்கள் பாதிப்பு

யாழ்ப்பாண மாவட்டத்தில் இன்று காலை ஏற்பட்ட சுழல் காற்று காரணமாக 48 குடும்பங்களை சேர்ந்த 219 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.

குருநகர் J68 மற்றும் J69 கிராம சேவையாளர் பிரிவுகளிலேயே குறித்த சேதங்கள் ஏற்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு தரப்பால் வழங்கப்பட்டுள்ளதுடன் சேத விபரங்கள் மதிப்பீடு செய்யும் பணிகள் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *