நெல் களஞ்சியசாலை விவகாரம்: அரசாங்கத்திடம் மட்டக்களப்பு விவசாயிகள் கோரிக்கை!

மட்டக்களப்பு மாவட்டத்தில் கைவிடப்பட்ட நிலையிலுள்ள  நெல் களஞ்சியசாலையைப் புனரமைத்துத் தருமாறு கோரி  விவசாயிகள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை, தென் மேற்கு பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவில் கைவிடப்பட்ட நிலையில்  காணப்படும் மணற்பிட்டி நெல் களஞ்சிய சாலையினையே இவ்வாறு புனரமைத்துத் தருமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அத்துடன் குறித்த களஞ்சிய சாலையில் மீண்டும் நெல்கொள்வனவினை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து விவசாயிகள் மேலும் தெரிவிக்கையில்”   நெல் கொள்வனவு செய்வதற்காக நெல் சந்தைப்படுத்தும் அதிகாரசபையினால் இந்த  நெல் களஞ்சியசாலை சகல வசதிகளுடனும் அமைக்கப்பட்டது. இதன் மூலமாக கடந்த காலத்தில்  நெல் கொள்வனவு செய்யப்பட்டு வந்தது.

எனினும் கடந்த சில காலமாக நெல் கொள்வனவு செய்வது நிறுத்தப்பட்டுள்ளதாக விவசாயிகள்  தெரிவித்துள்ளனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *