சாதாரணமாக முச்சக்கர வண்டியில் பாராளுமன்றம் சென்ற வன்னி எம்.பி

சாதாரண மக்களைப் போல் தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன் முச்சக்கர வண்டியில் இன்றைய தினம் (23.01) பாராளுமன்ற அமர்வுக்குச் சென்றுள்ளார்.

வவுனியாவில் இருந்து பேரூந்தில் கொழும்பு சென்ற அவர் அங்கு தனது விடுதியில் இருந்து முச்சக்கர வண்டி ஒன்றை வாடகைக்கு அமர்த்தி அதில் பாராளுமன்றம் சென்று பாராளுமன்ற அமர்வில் கலந்து கொண்டுள்ளார்.

ஆடம்பரமின்றி மக்களை போல் மக்களது துன்பங்களை உணர்ந்தவனாக இவ்வாறு சென்றதாக அவர் தெரிவித்துள்ளார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *